Pages

Thursday, April 21, 2011

தேடல்

என்றோ தொலைத்த ஒன்றை
இன்று தேடினேன்
அன்னையின் அரவணைப்பில்
தந்தையின் வழிகாட்டலில்
ஆசிரியரின் தூண்டுதலில்
தங்கையின் செல்ல சிணுங்கல்களில்
நண்பனின் நட்பில்
காதலின் கூடலில்
சூழ்நிலைகளின் மாற்றத்தில்
இயற்கையின் பிரம்மாண்டத்தில்
எங்கெங்கோ தேடி பின் அறிந்தேன்,,,
தொலைத்த இடம் என்னுள் என்று...
உணர்ந்த இக்கணம்,
என்(னுள்) தேடல் தொடங்கியது....